பதநீர் இறக்கும் போது விபத்து : பனைமரத்தில் இருந்து விழுந்தவர் பலி

திருச்செந்தூர், குருநாதபுரத்தை சேர்ந்த செந்தூர்பாண்டி என்பவர் பனைமரம் ஏறி பதநீர் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

Update: 2019-05-22 21:46 GMT
திருச்செந்தூர், குருநாதபுரத்தை சேர்ந்த செந்தூர்பாண்டி என்பவர் பனைமரம் ஏறி பதநீர் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். வழக்கம் போல் பனைமரம் ஏறி பதனீர் எடுக்கும் போது எதிர்பாராதவிதமாக செந்தூர்பாண்டி தவறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செந்தூர்பாண்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்