குழந்தை மற்றும் கணவரை கொன்ற வழக்கு : தீபிகாவுக்கு உதவியாக இருந்த ஜெபராஜ் என்பவர் கைது

வேலூர் அருகே கணவர் மற்றும் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான பெண் ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2019-05-18 10:47 GMT
ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா பகுதியைச் சேர்ந்த தீபிகா, கணவர் மற்றும் குழந்தையை கொன்று புதைத்துவிட்டு காணவில்லை என நாடகமாடினார். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், கணவர் மற்றும் குழந்தையை கொன்று வீட்டின் அருகே புதைத்ததை அந்த பெண் ஒப்புக்கொண்டார். இதையடுத்து புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட தீபிகா, ஆற்காடு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பத்மாவதி, முன் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, தீபிகாவிற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி ஜெயராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்