இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவர் விடுதி...

நெல்லை மாவட்டம் நல்லாம்மாள்புரம் அரசு பள்ளி மாணவர் விடுதியை புதுப்பித்து தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2019-05-17 10:14 GMT
நெல்லை மாவட்டம்  நல்லாம்மாள்புரம் அரசு பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி பாராமரிப்பு இன்றி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேற்கூரை இடிந்து விழுந்து  சுவரே இல்லாமல் காட்சி அளிப்பதாகவும், தினமும் சிமெண்ட் கற்கள் உடைந்து விழுந்து வருவதால் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன், தரைத்தளமும் சேதம் அடைந்து காணப்படுவதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். பள்ளி வாகனங்களின் தரத்தை ஆய்வு செய்யும் அரசு , இதுபோன்ற விடுதிகளையும் ஆய்வு செய்யலாம் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்