திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மழை வேண்டி யாகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

Update: 2019-05-16 20:11 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருவதால்,தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் மழை வேண்டியாகம் நடத்த அறநிலையத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம் மற்றும் யாக வேள்வி நடைபெற்றது.பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் கடலுக்கு எடுத்து வரப்பட்டு கடலில் புனித நீரை சமர்ப்பித்து வேண்டுதல் செய்யப்பட்டது.இந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்
Tags:    

மேலும் செய்திகள்