மகள் தற்கொலை - பழி வாங்கிய தந்தை

மகள் தற்கொலைக்கு காரணமானவனை, கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-13 10:08 GMT
அரியலூர் மாவட்டம்  இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல், விருத்தாசலம் அருகே புதுக்குப்பம் பகுதியில் வசித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்ததையடுத்து, அதே பகுதியை சேர்ந்த ஆனந்தவள்ளி என்பவருடன் அவர், சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குமரவேலுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ஆனந்தவள்ளி கடந்த ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஆனந்தவள்ளியின் தந்தை ஏழுமலை, குமரவேலை கொலை செய்ய சரியான நேரம் பார்த்து காத்துக்கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று, குமரவேலுக்கு மது வாங்கி கொடுத்த ஏழுமலை, அவருக்கு மதுபோதை தலைக்கு ஏறியதும், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் குமரவேலின் உடலை தனது ஆட்டோவில் ஏற்றி செந்துறை பகுதியில் வீசிவிட்டு ஊர் திரும்பியுள்ளார். அப்போது வாகனசோதனையில் ஈடுபட்ட போலீசார், ஆட்டோவில் இருந்த ரத்தகரையை பார்த்துவிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் குமரவேலை கொலை செய்ததை ஏழுமலை ஒப்புக்கொண்டதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்