தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் ரூ.2,000 வழங்கப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் ஆ.பி. உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2019-05-04 10:57 GMT
தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் ஆ.பி. உதயகுமார் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் பிரசாரத்தில், ஈடுபட்டனர் அப்போது பேசிய உதயகுமார், வறட்சி நிவாரண தொகையை வழங்க விடாமல் திமுக தடுப்பதாகவும், தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் அந்த பணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். வெளியூரில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்து எதிர்க்கட்சியினர் தேர்தல் வேலைகளை செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்