மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு : தவளைக்கும், ஓணானுக்கும் திருமணம் செய்து வைத்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிராம மக்கள் மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-28 18:51 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிராம மக்கள் மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.  திருமணி கிராமத்தில் கடந்த சில  ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் மழை பெய்ய வேண்டி கிராம மக்கள்  ஏரிக்கரையில் இருக்கும் 
பொன்னி அம்மனுக்கு களி, கருவாட்டு குழம்பு வைத்து படையலிட்டனர். பின்னர் தவளைக்கும் ஓணானுக்கும் திருமணம் செய்து வைத்து நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.  
Tags:    

மேலும் செய்திகள்