இலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி

சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

Update: 2019-04-28 06:57 GMT
இலங்கை தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலைய பாதுகாப்பு படை, விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படை ஆகியோர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர். பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதால் பய்ணிகள் ரசாயன பொருட்களை கொண்டு செல்ல  தடை விதிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்