வாக்கு மையத்தில் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரம்
மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மக்களவை தொகுதி வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்தில் பெண் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரி குருசந்திரனை இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம், சாந்தக்குமாரை நியமனம் செய்துள்ளது. இந்த தகவல் தேர்தல் ஆணையம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது .இதைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன், குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையர் மோகன்தாஸ் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.