கோவில் திருவிழாவில் தகராறு எதிரொலி : கொலை செய்வதற்காக பதுங்கியிருந்தவர்கள் கைது

சென்னை தண்டையார்பேட்டையில் கோவில் திருவிழா தகராறில் பழி தீர்ப்பதற்காக ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-24 23:56 GMT
அங்குள்ள நேதாஜிநகர் பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நின்ற 5 பேரை ரோந்து போலீசார் விசாரித்தபோது கடந்த 19ஆம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று முருகன் கோவில் திருவிழாவின்போது ஆனந்த் என்பவரை தாக்கியதால் திவாகரன் என்பவரை தீர்த்துக் கட்ட சுற்றித் திரிந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், கோவில் திருவிழா மோதல் தொடர்பாக திவாகரன் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்