பள்ளி கட்டடத்தில் மேற்கூரை உடைந்து விழுந்து விபத்து

மழை காரணமாக உடைந்து விழுந்து விபத்து

Update: 2019-04-21 13:00 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களுக்கு மேலாக  பரவலாக மழை பெய்து வருகிறது. மலையோர கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் கடுக்கரை அனந்தபுரத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில், ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரை மழையின் காரணமாக உடைந்து விழுந்தது. கோடை விடுமுறை என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்