திருவொற்றியூரில் நான்கு மணி நேரமாக எரிந்த குப்பை கிடங்கு

கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

Update: 2019-04-19 19:40 GMT
சென்னை திருவொற்றியூரில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு யாரும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து  காணப்பட்டது.இதனால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் குப்பை கிடங்கில் எரிந்த  தீயினை 4 மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்