"மாணவர்களை முன்னிலைப்படுத்தி விளம்பரபடுத்த கூடாது" - தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை

மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்தும் செயலில் ஈடுபடக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-04-19 12:16 GMT
மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்தும் செயலில் ஈடுபடக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையில், மதிப் பெண்களை மையமாக வைத்து மாணவர்களின் புகைப்படங்களை வெளியிடுவதோ, விளம்பர நோக்கில் செயல்படுவதோ கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், இதனை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்