15 வயது மதிக்கத்தக்க சிறுவன் உடல் மீட்பு : சிறுவனை அடையாளம் காணும் பணியில் போலீஸ்

திருவண்ணாமலை அருகே ஏரிக்கரையில், எரிந்த நிலையில் கிடந்த15 வயது மதிக்கத்தக்க சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

Update: 2019-04-12 11:54 GMT
ஆவூர் ஏரிக்கரையில், எரிந்த நிலையில் சிறுவனின் சடலம் கிடப்பதாக வேட்டவலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சிறுவன் யார், முகவரி என்ன கடத்தி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்