தி.மு.க. எம்.எல்.ஏ. உறவினர் அடித்துக் கொலை - முன்விரோதத்தால் கொலையா எனவும் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேர்வீட்டை சேர்ந்த செல்லப்பா என்பவர்,நத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆண்டி அம்பலத்தின் மைத்துனர்.

Update: 2019-04-11 03:34 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேர்வீட்டை சேர்ந்த செல்லப்பா என்பவர், நத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆண்டி அம்பலத்தின் மைத்துனர். கிராம திருவிழாவையொட்டி கச்சேரி நடைபெற்றுள்ளது. இதனிடையே தோட்டத்து வீட்டில் மர்ம நபர்களால் தலையில் அடித்து இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது நேற்று காலை தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைபற்றி அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் போலீஸ் மோப்ப நாய்  வரவழைக்கபட்டு விசாரணை நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. சக்திவேல் மற்றும் டி.எஸ்.பி. சுகாசினி சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்