வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி

பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் முற்றுகை போராட்டம்

Update: 2019-03-26 00:08 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியினரை பிடித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.  எழில் நகரில் வசித்து வந்த, நாகராஜன் மற்றும், சாந்தி இருவரும், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, லட்சக் கணக்கில் பணம் பெற்று கொண்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் பாதிப்புக்குள்ளான, ராஜா என்பவர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், சாந்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்