ரூ. 1.05 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவ நத்தத்தில் உரிய ஆவணங்கள் இன்றி IOB வங்கி கிளைகளுக்கு எடுத்து செல்லப்பட்ட, 1 கோடியே 5 லட்ச ரூபாயை, தேர்தல் பற க்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-25 23:58 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவ நத்தத்தில் உரிய ஆவணங்கள் இன்றி IOB வங்கி கிளைகளுக்கு எடுத்து செல்லப்பட்ட, 1 கோடியே 5 லட்ச ரூபாயை, தேர்தல் பற க்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி, ஐ.ஓ.பி வங்கியில் இருந்து, 1 கோடியே 5 லட்ச ரூபாயை எடுத்துகொண்டு மம்சாபுரம், வெம்பக்கோட்டை,மேட்டுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், உள்ள IOB வங்கி கிளையில் செலுத்த ஊழியர்கள் கொண்டு சென்றனர். அப்போது வாகன சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்