ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.10 லட்சம் பறிமுதல்

கோவை அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 10 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-19 04:51 GMT
கோவை அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 10 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாலக்காடு - கோவை சாலையில் வந்த கேரள மாநிலம் பாலக்காட்டைச்  சேர்ந்த அபிலாஷ் என்பவரின், காரில் இருந்து இந்த பணம் பறிமுதல் செய்யப் பட்டது. உரிய ஆவணங்களை அளித்து பணத்தை திரும்ப பெறலாம் என அபிலாசிடம் கூறியுள்ள அதிகாரிகள், பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்