உரிய ஆவணமில்லாத ரூ.3.12 லட்சம் பறிமுதல்

வேலூர் குடியாத்தம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட மூன்று லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-03-15 10:36 GMT
வேலூர் குடியாத்தம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட மூன்று லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குடியாத்தம் அடுத்த பாக்கம், என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த மருந்து கடை உரிமையாளர் பாஸ்கர் என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் வீடு கட்டுவதற்காக கிரானைட் கல் வாங்க மூன்று லட்சம் ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணமில்லாத காரணத்தால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்