பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்கு கண்டனம் : பல்கலைகழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தை கண்டித்து சிதம்பரம் அண்ணமலை பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-14 04:36 GMT
பொள்ளாச்சி பாலியல் குற்றத்தை கண்டித்து சிதம்பரம் அண்ணமலை பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சென்ற போலீசார் மாணவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியும், மாணவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து மாணவர்கள் வைத்திருந்த பதாகைகளை போலீசார் பறித்ததால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.
Tags:    

மேலும் செய்திகள்