ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்துவதால் நில அதிர்வு"

ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்துவதால் நில அதிர்வு"

Update: 2019-03-12 21:00 GMT
மணலி புதுநகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் பதினோரு மாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள், இப்பணிகளை நிறுத்த வலியுறுத்தி சம்பந்தபட்ட இடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அடுக்குமாடி குடியிருப்பிற்காக ராட்சத இயந்திரங்கள் கொண்டு பூமியில் துளையிடப்படுவதால், நில அதிர்வு ஏற்பட்டு வீடுகளில் விரிசல் விழுந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தகவலறிந்து வந்த போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
Tags:    

மேலும் செய்திகள்