தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன : மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரம்

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் வாகன சோதனையில் இறங்கியுள்ளது.

Update: 2019-03-11 02:12 GMT
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் வாகன சோதனையில் இறங்கியுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், நெல்லை மாவட்டத்தில் 30 பறக்கும் படைகள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை வருவாய் வட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை நெல்லை மாநகர் பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டது.

Tags:    

மேலும் செய்திகள்