தலைமை காவலர் மீது கற்கள் கொண்டு தாக்குதல் : மது அருந்தியதை தட்டி கேட்டதால் இளைஞர்கள் ஆத்திரம்

சென்னை தாம்பரத்தில், மது அருந்திய இளைஞரை தட்டிக்கேட்ட தலைமை காவலரை, கத்தியை காட்டி மிரட்டி கற்களை கொண்டு தாக்கிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-03-09 03:35 GMT
பழைய ஜி.எஸ்.டி சாலையில், மது அருந்தி கொண்டிருந்த இளைஞர்களை, தலைமை காவலர் இளங்கோ, கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அவரை ஓட ஓட விரட்டி, கற்களால் தாக்கியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து காவலரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள், வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்