அ.தி.மு.க. எம்.பி.ராஜேந்திரன் மறைவு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-23 10:55 GMT
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சாலை  விபத்தில் ராஜேந்திரன் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு தாம் மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்ததாக முதலமைச்சர், வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.  கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ள ராஜேந்திரன் மக்கள் நலனுக்காக பாடுபட்டவர் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ராஜேந்திரன் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார். ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்