"முகிலனை உடனடியாக மீட்டுத்தர வேண்டும்" - நெல்லை ஆட்சியரிடம் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மனு

மீட்காவிட்டால் தொடர் போராட்டம் எனவும் எச்சரிக்கை

Update: 2019-02-21 15:31 GMT
சுற்றுச் சூழல் ஆர்வலர் முகிலனை உயிருடன் மீட்டுத் தரக்கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் 20 சமூக அமைப்புகள் மனு அளித்துள்ளனர். பொறியியல் பட்டதாரியான முகிலன்,  சுற்றுச் சூழல் மற்றும் சமூக மனித உரிமை செயற்பாட்டளராக உள்ளதாகவும், கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து இரவு 11.30 மணி அளவில் மதுரை வரும் ரெயிலில் ஏறிய சிறிது நேரத்தில் மாயமாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக முகிலனை மீட்காவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்