கலப்பட வெல்லம்- 12 ஆலைகளுக்கு அபராதம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலப்பட வெல்லம் தயாரித்த 12 ஆலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-02-21 10:21 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலப்பட வெல்லம் தயாரித்த 12 ஆலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளை சர்க்கரை மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரத்தை கலந்து கலப்பட வெல்லம் தயாரிக்கப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.  இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் 4 டன் கலப்பட வெல்லத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ஆலைக்ளுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்