சென்னை நபருக்கு விசித்திர போன் கால்..மக்களே இப்படி வந்தா போன எடுக்காதீங்க - உஷார்.. உஷார்..!

Update: 2024-04-29 06:30 GMT

அதிகப்படியான கருப்புப் பணம் வங்கி கணக்கில் இருப்பதாகக் கூறி, மும்பை போலீஸ் போல நடித்து பணத்தை பறித்த மர்ம நபர்களை, போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனி மெயின் ரோட்டை சேர்ந்த சூரியன் என்பவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்மநபர், டிராய் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, கருப்புப் பணம் பரிமாற்றம் நடந்திருப்பதால் மும்பை காவல்துறையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சூரியன், விசாரணைக்கு ஆஜராக முடியாது எனக்கூற, ஸ்கைப் ஆப் மூலமாக தொடர்பு கொண்ட அந்த மோசடி நபர், வழக்கில் சிக்காமல் இருக்க, 42 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய சூரியன் 42 ஆயிரம் பணத்தை அவர் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். மீண்டும் தொடர்புகொண்ட ஆசாமி 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்புமாறு மிரட்டியதால், சந்தேகமடைந்த சூரியன் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்