"மகளிர் பிரச்சனை குறித்து 181 என்ற எண்ணில் கூறலாம்" - மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி தகவல்

மகளிருக்கான பிரச்சனை குறித்து 181 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி தெரிவித்தார்.

Update: 2019-02-18 14:50 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கோட்டுவீராம்பாளையம் பகுதிக்கு வருகை தந்த தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி கண்ணகி பாக்கியநாதன் ஐ.ஏ.எஸ்.,  அப்பகுதியில் உள்ள பெண் நெசவாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். மகளிருக்கான பிரச்சனை குறித்து 181 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்