"40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வி அடையும்" - தினகரன்
அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.
அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார். சூரம்பட்டிவலசு -வெள்ளோடு - அவல்பூந்துறை - மொடக்குறிச்சி - சிவகிரி - சாலைப்புதூர் ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக - பா.ஜ.க கூட்டணி என்பது தமிழக மக்கள் விரும்பாத அரசுகள் அமைக்கும் கூட்டணி என்றார். 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அமமுக சில கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது, தேர்தல் அறிவித்தவுடன் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.