டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு - ரூ1.5 லட்சம் கொள்ளை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-02-16 22:48 GMT
சிக்களூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்த பணம் ஒன்றரை லட்ச ரூபாயை ஊழியர் மகரஜோதி எடுத்துக்கொண்டு, நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் கும்பல், அவரை கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த மகரஜோதியை அப்பகுதி மக்கள் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். கொள்ளை சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் ஊத்தங்கரை அருகே காட்டேரியில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒரு லட்சத்து 40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. அதே பகுதியில் 2வது முறையாக டாஸ்மாக் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்