திருவண்ணாமலை : 5 ஆயிரம் கடனுக்காக வீடு அபகரிப்பு

திருவண்ணாமலையில் 5 ஆயிரம் ரூபாய் கடனுக்காக மூதாட்டி ஒருவரிடம் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை பெண் ஒருவர் அபகரித்துள்ளார்.

Update: 2019-02-13 03:27 GMT
திருவண்ணாமலை அஜீஸ் காலணி பகுதியில் வசித்து வரும் காஞ்சனா என்ற மூதாட்டியின் மகன், தங்கப்பன் என்பரிடம் சில வருடங்களுக்கு முன்பு 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்கப்பன் மற்றும் அவரது உறவினர் விஜயலட்சுமி ஆகியோர் காஞ்சனா வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் கஞ்சனாவையும் அவருடன் தங்கி இருந்தவர்களையும் இரவோடு இரவாக வெளியேற்றிய அவர்கள், அங்கேயே தங்கியுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் அவர்கள் வெளியே எடுத்து வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காஞ்சனா,  தன்னுடைய வீட்டை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 5 ஆயிரம் ரூபாய் கடனுக்காக மூதாட்டியிடம் இருந்து  வீட்டை பெண் ஒருவர் அபகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்