மெட்ரோ ரயில் இலவச சேவை 3-வது நாளாக நீட்டிப்பு
சென்னை மெட்ரோ ரயில் இலவச சேவை 3-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையிலான 10 கிலோ மீட்டர் வழித்தடத்தை பிரதமர் மோடி திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் அனைத்து வழித்தடங்களிலும் இலவச பயணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் இந்த இலவச சேவை 3-வது இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.