"மருத்துவ சிகிச்சை விசாரணைக்கு மட்டுமே தடை கோரி மனு" - அப்பலோ நிர்வாகம் விளக்கம்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாக தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவில்லை என்று அப்பலோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாக தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவில்லை என்று அப்பலோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மருத்துவ சிகிச்சை தொடர்பான விசாரணைக்கு மட்டுமே தடை கோரியும், அப்பல்லோ மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டியும் மனு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.