ராமலிங்கம் கொலை வழக்கு : கொலைக்கு பயன்படுத்திய காரின் உரிமையாளர் கைது

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் மத பிரச்சினை காரணமாக கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2019-02-11 19:58 GMT
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் மத பிரச்சினை காரணமாக கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் கொலையாளிகள் பயன்படுத்திய கார் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து காரின் உரிமையாளரான முகமது இப்ராஹிம் என்பவரை  போலீசார்  கைது செய்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து முகமது இப்ராஹிம் சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்