மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருட்டு

காவலர்கள் பணியில் இருந்த போதே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த மடிக்கணினி திருடப்பட்டுள்ளது.

Update: 2019-02-10 07:31 GMT
காவலர்கள் பணியில் இருந்த போதே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த மடிக்கணினி திருடப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பாதுகாவலர் ராஜேந்திரன் 
என்பவரின் இருசக்கர வாகனம் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அப்போது, பணியில் இருந்தவர்கள் தீயை அணைக்க சென்றபோது, அலுவலகத்தில் இருந்த மடிக்கணினி மற்றும் மானிட்டரை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். காவலர்களை திசை திருப்பவே வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்