செக் மோசடி வழக்கில் திமுக பிரமுகர் கைது...

செக் மோசடி வழக்கில் காசிமேட்டை சேர்ந்த திமுக வட்ட செயலாளர் முத்தழகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-02-08 23:53 GMT
செக் மோசடி வழக்கில் காசிமேட்டை சேர்ந்த திமுக வட்ட செயலாளர் முத்தழகனை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று லட்ச ரூபாய்க்கு வங்கி காசோலை கொடுத்து ஏமாற்றியதாக பரந்தாமன் என்பவர் சென்னை ஜார்ஜ் டவுன் விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் திமுக பிரமுகர் முத்தமிழனை பிடிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து காசிமேடு போலீசார் முத்தமிழனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்