4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : விசைத்தறி மேஸ்திரி போஸ்கோ சட்டத்தில் கைது...

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விசைத்தறி மேஸ்திரி கணபதி என்பவர் போஸ்கோ சட்டத்தில் கைது.

Update: 2019-02-08 22:21 GMT
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விசைத்தறி  மேஸ்திரி கணபதி என்பவர், போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை பிடித்து பள்ளிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் கணபதி போஸ்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்