முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சரணடைவதில் இருந்து விலக்கு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சரணடைவதில் இருந்து உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

Update: 2019-02-04 09:28 GMT
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சரணடைவதில் இருந்து உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. பேருந்தை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் அவருக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து, உடனடியாக பதவியை அவர் இழந்தார். இந்நிலையில், பிப்ரவரி 7ம் தேதிக்குள் சரணடையுமாறு அவருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்