ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் - ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

தமிழக அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி, சென்னையில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-01-09 11:05 GMT
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு  தமிழக அரசு உடனடியாக உத்தரவிடக்கோரி, சென்னையில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். ஆலையை திறக்க அனுமதி வழங்கக் கோரும் சுமார் ஒன்றரை லட்சம் மனுக்களையும் அவர்கள் கொண்டு வந்திருந்தனர். பின்னர் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் மனு அளிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்