பொங்கலுக்கு பிறகு ரஜினி நிலைப்பாட்டை அறிவிப்பார் - சத்யநாராயணராவ்

கட்சி தொடங்குவது குறித்து பொங்கலுக்கு பிறகு தனது நிலைப்பாட்டை ரஜினி அறிவிப்பார் என அவரது சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-06 13:24 GMT
ஒசூர் அருகே நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு பேசிய அவர், ரஜினி மக்கள் மன்றம் நல்ல முறையில் செயல்படுவதாக தெரிவித்தார். ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு உள்ளதாகவும், கூடிய விரைவில் அதன் அறிவிப்பும் இருக்கும் எனவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்