நெல்லை : அழகிய கூத்தர் திருக்கோயில் ஆருத்ரா தரிசன விழா

நெல்லை மாவட்டத்தில் உள்ள செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் ஆருத்ரா தரிசன திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

Update: 2018-12-22 11:52 GMT
நெல்லை மாவட்டத்தில் உள்ள செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் ஆருத்ரா தரிசன திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தன்று கோயிலின் நடை அதிகாலை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்கு ரத வீதிகளையும் வலம் வந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்