சிறப்பு பிரார்த்தனை எனக்கூறி ரூ.7 லட்சம் மோசடி

குழந்தையில்லாத தம்பதியரிடம், சிறப்பு பிரார்த்தனை எனக் கூறி, 7 லட்சம் ரூபாய் மோசடி செய்த கிறிஸ்தவ மத போதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-12-22 10:53 GMT
குழந்தையில்லாத தம்பதியரிடம், சிறப்பு பிரார்த்தனை எனக் கூறி, 7 லட்சம் ரூபாய் மோசடி செய்த கிறிஸ்தவ மத போதகர்  கைது செய்யப்பட்டுள்ளார். பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்தவ மத போதகர் ஜெயகுமார்.
இவர் நடத்தி வரும் சபைக்கு ஐயப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஆனந்தன்- ஷர்மிளா ஆகியோர், கடந்த சில வருடங்களாக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், சிறப்பு பிரார்த்தனை செய்வதாக கூறி, ஜெயகுமார் 7 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார். இதில், 40 ஆயிரம் ரூபாயை திருப்பித்தந்த ஜெயகுமார், மீதி பணத்தை தரவில்லை. பல முறை கேட்டும் பணம் கிடைக்காத நிலையில், குழந்தை இல்லாத அந்த தம்பதியர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதன்படி, மத போதகர் ஜெயகுமாரை கைது செய்த காவல்துறையினர், பண மோசடி வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்
Tags:    

மேலும் செய்திகள்