சென்னையில் மாணவர்கள் இடையே மோதல் : அரசுப் பேருந்து கண்ணாடிகள் அடித்து உடைப்பு

சென்னையில் அரசு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அரசுப் பேருந்து கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-18 20:30 GMT
சென்னை அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் மாநிலக் கல்லூரி மற்றும் நந்தனம் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. சிம்சன் சிக்னல் அருகே பேருந்து வந்தபோது மாணவர்களுக்கு இடையே மோதல் முற்றியது. இதில் அரசுப் பேருந்தின் கண்ணாடிகளை மாணவர்கள் அடித்து நொறுக்கியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 மாணவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்