மதுரையில் மகளிர் சுய உதவிக் குழு என்ற பெயரில் ரூ. 7 லட்சம் மோசடி

மதுரையில் மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-12-18 11:53 GMT
மதுரையில் மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பரவை பகுதியிலுள்ள சத்தியமூர்த்தி நகரில் வசித்து வரும் செல்லம்மாள், முத்து, தமிழரசி ஆகிய மூவரும், அந்த பகுதியில் உள்ள பெண்களிடம், மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கி தருவதாக கூறி 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் கடந்த 8 வருடங்களாக கடனும் வாங்கி தராமல், கட்டிய பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்