பெரியப்பாவின் நெஞ்சில் பாய்ந்த குண்டு.. கொடூர செயலை செய்த தம்பி மகன்

Update: 2024-05-03 03:05 GMT

சொத்து தகராறில் இளைஞர் ஒருவர் தன் பெரியப்பாவை நாட்டு துப்பாக்கியால் சுட்ட சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் புதூர் நாடு பகுதியை சேர்ந்தவர் காளி. இவருக்கும் இவருடைய தம்பி மகன் சம்பத்துக்கும் இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் பெரியப்பாவை சம்பத் சுட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு மருத்துவமனையில் ஆபத்தான முறையில் காளி சிகிச்சை பெற்று வரும் நிலையில், இளைஞர் சம்பத்தை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்