சிதம்பரம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலை

சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை பிடித்த இளைஞர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2018-12-12 10:08 GMT
சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை பிடித்த இளைஞர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவாயம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் அதிகாலையில், 100 கிலோ எடையும் 10 அடி நீளமுடைய முதலை ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் வருவதற்கு கால தாமதமானதால் இளைஞர்கள் ஒன்று கூடி அதன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்