"நெல் ஜெயராமன் மறைவு வேளாண் துறைக்கு பேரிழப்பு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

நெல் ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும் விவசாயிகளுக்கும் பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-06 07:57 GMT
நெல் ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும் விவசாயிகளுக்கும் பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரம்பரியம் மிக்க 174 நெல் ரகங்களை மீட்டு, பிரபலப்படுத்தி அதன் உற்பத்தியை ஊக்கப்படுத்தியவர் நெல் ஜெயராமன் என புகழாரம் சூட்டியுள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, நெல் ஜெயராமனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்