கஜா புயல்: மரங்களை அறுக்கும் இயந்திரத்தை வழங்கிய அமைச்சர்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அகற்ற தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு மரம் அறுக்கும் இயந்திரத்தை அமைச்சர்கள் வழங்கினர்.

Update: 2018-11-29 21:49 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அகற்ற தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு மரம் அறுக்கும் இயந்திரத்தை அமைச்சர்கள் வழங்கினர். புயலால் பாதிக்கப்பட்டு விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற முடியாமல் விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் முதற்கட்டமாக 300 மரம் அறுக்கும் இயந்திரங்கள் விவசாயிகள் உபயோகத்திற்காக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் செங்கோட்டையன் , துரைக்கண்ணு, கடம்பூர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்