நகராட்சி ஆணையர் வாகனத்தை மறித்து கிராம மக்கள் போராட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற நகராட்சி நிர்வாக ஆணையர் வாகனத்தை பொதுமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்னர்.

Update: 2018-11-18 09:48 GMT
கஜா புயலில் பிரதபராம்புரம் விழுந்தமாவடி செம்போடை உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் குடிநீர், உணவு கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பிரதபராம்புரம் கிராமத்தை பார்வையிட சென்ற நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷின் வாகனத்தை பொதுமக்கள் வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். 
 
Tags:    

மேலும் செய்திகள்