அடியோடு சாய்ந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடசேரியில், கஜா புயலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன.

Update: 2018-11-18 08:07 GMT
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடசேரியில், கஜா புயலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. குலைகளோடு சாய்ந்து கிடக்கும் தென்னைகளை  விவசாயிகள் வேதனையோடு பார்த்து செல்கின்றனர். மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதுவரை எந்த அதிகாரியும் தங்களை வந்து பார்க்கவில்லை என்று கூறும் மக்கள், உடனடியாக தங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்